பாராளுமன்ற அமர்வு இன்று (03) வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் பி.ப. 5.00 மணிவரை 2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் பி.ப. 5.00 மணி முதல் பி.ப.5.30 மணிவரை எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.
இன்றைய பாராளுமன்ற அமர்வு தொடர்பான அறிவித்தல்
Reviewed by Editor
on
December 03, 2021
Rating: