சனிக்கிழமை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (08) காலை 8.00 மணி முதல் இரவு 12.00 வரையான 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீரவழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமையவாக, கொழும்பு , தெஹிவளை – கல்கிசை, கோட்டை, கடுவளை ஆகிய மாநகர சபைகளுக்குட்பட்ட பிரதேசங்களிலும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலொன்னாவ நகர சபைகளுக்குட்பட்ட பிரதேசங்களிலும், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் இரத்மலானை பகுதியிலும் இந்த  நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.





சனிக்கிழமை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல் சனிக்கிழமை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல் Reviewed by Editor on January 06, 2022 Rating: 5