நாளை முதல் நாளாந்தம் மின்வெட்டு அமுல்

நாளை முதல் (10) திங்கட்கிழமை நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கமைவாகவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் திரு. ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலுக்கு வரும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.



நாளை முதல் நாளாந்தம் மின்வெட்டு அமுல் நாளை முதல் நாளாந்தம் மின்வெட்டு அமுல் Reviewed by Editor on January 09, 2022 Rating: 5