மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலார்கள் அமைப்பின் 2022ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக ஏறாவூரை சேர்ந்த அஸ்மி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சு இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்களில் செயலாற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்பின் புதிய நிருவாக தெரிவும் பொதுக்கூட்டமும் சனிக்கிழமை (08) மாலை ஏறாவூரில் இடம்பெற்றது.
அதனடிப்படையில் அமைப்பின் புதிய தலைவராக ஏறாவூரைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அஸ்மி தெரிவாகியதுடன் செயலாளராக ஓட்டமாவடியை சேர்ந்த பாரிஸூம், பொருளாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஹூஸைன் அவர்களும் தெரிவாகியுள்ளனர்.
தலைவர்- ஏ.எம். அஸ்மி
செயலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ்
பொருளாளர் - ஏ.எச்.ஏ.ஹுசையின்
பிரதித் தலைவர்கள்
I. எம்.ஐ.பாறூக்
II. எம்.எஸ்.எம்.சஜீ
உப செயலாளர் - எம்.ஐ.அப்துல் நஸார்
ஊடக இணைப்பாளர்கள்
I - எஸ்.எம்.எம்.முர்ஷித்
II -எம்.ஏ.சீ.எம்.ஜலீஸ்
III-எம்.ஜீ.ஏ.நாஸர்
கணக்குப் பரிசோதகர் - எச்.எம்.எம்.பர்ஸான் ஆகியோர் இவ்வாண்டின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாக பொதுச் சபையினால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.ஜீ.ஏ.நாஸர், எம்.ஐ.பாறூக், ஏ.எச்.ஏ.ஹுசையின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இவ்வமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(நன்றி - அல்மசூறா)