தேசிய காங்கிரஸ் சார்பில் மற்றுமொரு உறுப்பினர் பிரதேச சபைக்கு நியமனம்

தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூதூர் பிரதேச சபைக்கு சுழற்சி முறையில் வை.எஸ்.எம்.சிஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தேசிய காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட சிஹான் அவர்கள் மூதூர் பிரதேச சபை உறுப்பினராக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களின் முன்னிலையில் இன்று (04) செவ்வாய்க்கிழமை கிழக்கு வாசலில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வில் கட்சியின்  சிரேஷ்ட பிரதி தலைவர் வைத்தியர் ஏ. உதுமாலெப்பை, தேசிய அமைப்பாளர் டாக்டர் வை.எஸ்.எம்.ஸியா, மூதூர் பிரதேச சபையின் தேசிய காங்கிரஸின் முன்னாள் உறுப்பினர்களான ஜே.எம்.சுக்ரி, எஸ்.ரீ.ஜஹ்பர், திருகோணமலை மாவட்ட தேசிய காங்கிரஸின் பொருளாளர் எஸ்.நபீர் (பாவா ஏஜென்சி) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.





தேசிய காங்கிரஸ் சார்பில் மற்றுமொரு உறுப்பினர் பிரதேச சபைக்கு நியமனம் தேசிய காங்கிரஸ் சார்பில் மற்றுமொரு உறுப்பினர் பிரதேச சபைக்கு நியமனம் Reviewed by Editor on January 04, 2022 Rating: 5