(ஏ.எல்.றியாஸ்)
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.ரஜாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொத்துவில் வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றிய டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே டொக்டர் ரஜாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரஜாப் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் புதன்கிழமை (26) தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்ட இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
இதன்போது வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், வைத்திய அத்தியட்சகர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரை மாலை அணிவித்து வரவேற்றனர்.
வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரஜாப் பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைகளில் வைத்திய அத்தியட்சகராகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.