(சியாத். எம். இஸ்மாயில், பட உதவி. கே. மாதவன்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிருவாக உத்தியோகத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றுச்செல்லும் ஏ.எம்.எம்.றிபாய் அவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் டொக்டர் ஏ.சீ.அப்துல் றசாக் தலைமையில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்திய அத்தியட்சகர் டொக்டர் அஸாத். எம். ஹனிபா கலந்து கொண்டு பொன்னாடை, ஞாபகச்சின்னம், பணப்பரிசு என்பனவற்றை வழங்கிவைத்ததுடன், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஆக்கில் அஹமட் சரிபுத்தீன், தாதிய பரிபாலகர் பி.ரீ.நௌபர், செயலாளர் ஏ.பி. நூறுல்லாஹ், கதிர் இயக்கவியலாளர் எஸ்.ரீ.எம்.றஹ்மத்துல்லா, நலன்புரிச்சங்கத்தின் உறுப்பினர்கள், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கொண்டனர்.
இவர் அரச சேவையில் 30 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.