மிக நீண்டகாலமாக திருகோணமலை மாவட்ட கிண்ணியா மக்கள் எதிர்பார்த்திருந்த அரச மருந்தக கூட்டுத்தாபணத்தின் ஒசுசல நிலையம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ எம்.எஸ்.தெளபீக் அவர்கள் எடுத்த முயற்சியின் பயனாக கிண்ணியா பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக இன்று (05) புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஹைறுல்லா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ அனுராத யஹம்பத் அவர்களும், கெளரவ அதிகிகளாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ கபில அத்துக்கொரல, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.