பிரதி திட்டமிடல் பணிப்பாளராக சப்ரி பதவி உயர்வு

(சர்ஜுன் லாபீர்)

அம்பாறை உஹன பிரதேச செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றும் எம்.எம்.முஹம்மட் சப்ரி அவர்கள் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரது கடிதத்திற்கமைய 2021.12.29 ம் திகதியில் இருந்து பிரதி திட்டமிடல் பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்ட இவர்கோமரன்கடவெல, மஹாஓயா ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக  கடமையாற்றியுள்ளார்.

சாய்ந்தமருதுவை பிறப்பிடமாகவும், கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், ஓய்வு பெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் முக்தார் அவர்களின் புதல்வராவார்.

இவர், தனது ஆரம்பக் கல்வியை கல்முனை சாஹிரா கல்லூரியில் கற்றதோடு பட்டப் படிப்பை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



பிரதி திட்டமிடல் பணிப்பாளராக சப்ரி பதவி உயர்வு பிரதி திட்டமிடல் பணிப்பாளராக சப்ரி பதவி உயர்வு Reviewed by Editor on February 16, 2022 Rating: 5