முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் தலைமையில் கல்வி அபிவிருத்தி தொடர்பான சந்திப்பு

அம்பாறை மாவட்டத்தில் உள்ள வரிப்பத்தான்சேனை அல்-அமீன் மகா வித்தியாலய மற்றும் இறக்காமம் அல்-அஷ்ரப் தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுடன் சனிக்கிழமை (19) கல்வி அமைச்சின் முஸ்லிம் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி அபிவிருத்தி சம்பந்தமான சந்திப்பு இறக்காமம் கோட்டக் கல்வி அலுவலகத்தில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கல்வி அமைச்சின்  முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் மேஜர் என்.ரீ. நசுமுத்தீன் அவர்கள் கலந்து கொண்டு க.பொ.த.(சா/த) மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சை மேம்பாடு சம்பந்தப்பட்ட மீளாய்வு பற்றி கலந்துரையாடப்பட்டது.

பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான   எஸ். எம்.ஹைதர் அலி,ஏ. எல்.அப்துல் மஜித், கோட்டக் கல்வி பணிப்பாளர் யூ.எல்.மஹ்மூதுலெவ்வை, குறித்த பாடசாலை அதிபர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டு கல்வி அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாடினார்கள்.







முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் தலைமையில் கல்வி அபிவிருத்தி தொடர்பான சந்திப்பு முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் தலைமையில் கல்வி அபிவிருத்தி தொடர்பான சந்திப்பு Reviewed by Editor on February 20, 2022 Rating: 5