ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்டத்திற்கான மகளிர் சம்மேளன கூட்டம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ. காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு சிறு பொருளாதார பயிர்ச்செய்கை இராஜாங்க அமைச்சர் கௌரவ. வியாழேந்திரன் சதாசிவம் அவர்களின் வருகையோடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (19) சனிக்கிழமை கோலாகலமாக இடம்பெற்றது.
மகளிரின் மகத்துவத்தை உலகறிய செய்யும் ஜனாதிபதியின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தை உயிரோட்டமாக்கும் இந்த நிகழ்வில் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெருந்திரளான பெண்கள் குறித்த சம்மேளன கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உள்ளூர் அரசியல் பிரபலங்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சி தலைமையக பதவிநிலை பிரதிநிதிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.