இறக்காமம், அட்டாளைச்சேனை மற்றும் கல்முனை பிரதேச செயலளாராக சேவை புரிந்த இலங்கை நிருவாக சேவை முதலாம் நிலை சிரேஷ்ட அதிகாரியான திரு. எம்.எம். நசீர் அவர்கள் நேற்று (01) திங்கட்கிழமை முதல் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சிறந்த ஆளுமைப் பண்பும், சேவை மனப்பான்மையும் கொண்ட இவர், இந்த நாட்டின் சிரேஷ்ட நிருவாக ஆளுமைகளில் ஒருவருமாவார்.
இவர், பிரதேச செயலாளராக கடமையாற்றிய காலத்தில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றிய பெரும் மதிப்புக்குறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளராக எம்.எம்.நசீர் நியமனம்
Reviewed by Editor
on
February 02, 2022
Rating: