இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மெய்யியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஏ.எல்.எம்.றியால் பேராதனை பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் விஷேட கலைமாணிப்பட்டத்தையும், முதுதத்துவமாணி பட்டத்தையும் பூர்த்தி செய்து தனது கலாநிதிப்பட்டத்தினை சீன ஜியாமென் (Xiamen) பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவர், மேற்கத்தேய மெய்யியல், அரசியல் மெய்யியல், ஒழுக்க மெய்யியல் போன்ற துறைகளில் தனது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதோடு பல தேசிய, சர்வதேச ஆய்வு மாநாடுகளிலும் பங்குபற்றி தனது ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளார்.
சனிக்கிழமை (26) நடைபெற்ற பேரவைக்கூட்டத்தின் தீர்மானத்திற்கமைய 06.12.2019 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் பேராசிரியராக கலாநிதி ஏ.எல்.எம்.றியால் பதவியுயர்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.