களனிப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மீது இன்று (02) புதன்கிழமை காலை இனந்தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நான்கு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் மூன்று மாணவர்கள் ராகம போதனா வைத்தியசாலையிலும் மற்றுமொரு மாணவர் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
இம்மாணவர்கள் ராகம மருத்துவ பீடத்தின் நான்காம் வருட மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்
Reviewed by Editor
on
February 02, 2022
Rating: