இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா தொற்று

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றது.

2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பல உருமாற்றங்களாக வளர்ந்து இன்று வரை உலக நாடுகளில் பரவி வருகிறது.

பிரித்தானியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வரும்  சூழலில், தடுப்பூசி போடும் பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மகாராணியாரின் மகன் இளவரசர் சார்லசுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தொற்று உறுதியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இரண்டு தடுப்பூசிகளையும் மகாராணி எலிசபெத் செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா தொற்று இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா தொற்று Reviewed by Editor on February 20, 2022 Rating: 5