இன்று (21) திங்கட்கிழமை அதிகாலை குருநாகல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக சேவையாளர் அல்ஹாஜ். எஸ்.எல்.அப்துல் ரஸாக் (நளீமி) அவர்கள் வாகன விபத்தில் படுகாயமடைந்து அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு அவரது மனைவி, பிள்ளைகளும் இவ்விபத்தில் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்கள்.
தோப்பூரிருந்து கொழும்பு நோக்கி தனது குடும்பத்தோடு காரில் பயணித்துக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வாகன விபத்தில் படுகாயம்
Reviewed by Editor
on
February 21, 2022
Rating: