அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின மரதன் ஓட்டம்

(எஸ்.எம்.அருஸ்)

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின்  74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு  அட்டாளைச்சேனை பிரதேச சபை ஏற்பாடு செய்த மரதன் ஓட்டப் போட்டி நிகழ்ச்சி இன்று (04) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது காலை  06.30 மணிக்கு ஒலுவில் வெளிச்ச வீட்டுச் சந்தியில் ஆரம்பித்து அட்டாளைச்சேனை பிரதேச சபை வளாகத்தில் நிறைவடைந்தது.

இப்போட்டி நிகழ்ச்சியில் அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குள் நிரந்தரமாக வசிக்கும் நூற்றுக்கணக்கான ஓட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். 

அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

இவ் மரதன் ஓட்டப்போட்டியில் ஆர்.எம்.அஸாம் முதலாமிடத்தையும், ஏ.சனூஸ் இரண்டாமிடத்தையும், எஸ்.சாதீர் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

வெற்றி பெற்ற வீரா்களுக்கான கிண்ணங்களையும் பரிசில்களையும் அதிதிகள் வழங்கி வைத்தனர். 

அத்தோடு போட்டியில் முதல் 10 இடங்களையும் பெற்ற வீரர்களுக்கு கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், விசேடமாக போட்டியில் பங்கேற்ற சகல வீரர்களுக்கும் பதக்கம் அணிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, சுதந்திர தினத்தில் இவ்வாறான மரதன் ஓட்டப் போட்டியை ஏற்பாடு செய்து, வீரர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுத்த பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா மற்றும் செயலாளர் ஐ.எல்.எம்.பாயிஸ் ஆகியோருக்கு அனைத்து விளையாட்டுக் கழகங்கள், பொதுமக்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.













அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின மரதன் ஓட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின மரதன் ஓட்டம் Reviewed by Editor on February 04, 2022 Rating: 5