(சமூர்டீன் நெளபர்)
இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மக்களுக்கான காணி உறுதிப் பத்திரம் மற்றும் நீதியமைச்சின் கீழ் இயங்கும் இழப்பீட்டு அலுவலகத்தினூடாக யுத்தத்தால் ஏற்பட்ட சொத்திழப்புக்கான இழப்பீட்டு காசோலை ஆகியன வழங்கும் நிகழ்வு இன்று (04) ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலாளர் திருமதி. ஜெயவதனி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சுமார் 200 பயனாளிகளுக்கான காணி அனுமதி பத்திரங்களும் 30 பயனாளிகளுக்கான இழப்பீட்டு காசோலையும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ. காதர் மஸ்தான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.