"எல்லோருக்குமான இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்" என்ற தொனியில் காத்தான்குடியில் சுதந்திர தின நிகழ்வு
(எம்.பஹ்த் ஜுனைட்)
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு "எல்லோருக்குமான இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் வெள்ளிக்கிழமை (04) காத்தான்குடி நல்லாச்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் தவிசாளர் வைத்தியர் கே.எம்.எம்.ஷாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
நல்லாச்சிக்கான தேசிய முன்னணியின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பிரதிப் பொறுப்பதிகாரி தென்னக்கோன் முன்னணியின் பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.சபீல் உள்ளிட்ட முன்னணியின் நகர சபை உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பாடசாலை மாணவர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் இளம் கண்டுபிடிப்பாளர் முனீர் பாறூக் கெளரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.