(ஏ.எல்.றியாஸ்)
74வது சுதந்திர தினத்தையொட்டி, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இன்று (04) வெள்ளிக்கிழமை பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.
வைத்திய அத்தியட்சகர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர் றஜாப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
தேசியக் கொடியினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர், வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை நிகழ்விலும் பங்கேற்றார்.
அதனைத்தொடர்ந்து வைத்திய அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினருடன் நோயாளர்களையும் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு
Reviewed by Editor
on
February 04, 2022
Rating: