இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 74வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து பதினொரு கைதிகள் இன்று (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் எஸ்.எல்.விஜேசேகர தலைமையில் இக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்றுவந்த கைதிகளே இவ்வாறு பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.
சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் எம்.மோகனதாஸ் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளும் இதன்போது கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு சிறையிலிருந்த பதினொரு கைதிகள் விடுதலை
Reviewed by Editor
on
February 04, 2022
Rating: