பாடசாலையில் தாக்கப்பட்ட ஆசிரியை நேரில் சந்தித்த தெளபீக் எம்.பி

பாடசாலைக்கு தனது கடமையை பொறுப்பேற்க சென்று பாதிக்கப்பட்ட திருகோணமலை சண்முக மகளிர் கல்லூரி ஆசிரியை பஹ்மிதாவை சந்தித்ததுடன் எதிரானவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நேற்று (02) புதன்கிழமை சண்முக வித்தியாலயத்திற்கு கடமையேற்கச் சென்ற ஆசிரியையான பஹ்மிதா அவர்கள் தாக்கப்பட்டு தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரை நேரடியாக சந்தித்ததுடன் இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குறிய முன்னெடுப்புக்கள் எடுக்கப்படுகின்றது.

இது சம்மந்தமாக திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை அவருடைய அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் இன்று சந்தித்து உரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.




பாடசாலையில் தாக்கப்பட்ட ஆசிரியை நேரில் சந்தித்த தெளபீக் எம்.பி பாடசாலையில் தாக்கப்பட்ட ஆசிரியை நேரில் சந்தித்த தெளபீக் எம்.பி Reviewed by Editor on February 03, 2022 Rating: 5