(றிஸ்வான் சாலிஹு)
ஈரானுக்கு சற்று தொலைவில் மூழ்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) சரக்குக் கப்பலின் பயணித்த 30பணியாளர்களில் ஒருவரைத் தவிர ஏனையவர்கள் மீட்கப்பட்டதாக ஈரானின் உத்தியோகபூர்வ ஐ.ஆர்.என்.ஏ செய்தி தளம் வியாழக்கிழமை (17) தெரிவித்துள்ளது.
இருபத்தி ஒன்பது குழு உறுப்பினர்கள் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளதோடு மேலும் மற்றொரு உறுப்பினரைக் கண்டுபிடிப்பதற்கான மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன" என்று ஈரானின் புஷெர் மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இந்த செய்தி தளத்திடம் தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இரண்டு ஈரானிய மீட்புக் கப்பல்கள் இருந்ததாகவும் வானிலை ஆய்வாளர்கள் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
துபாயை தளமாகக் கொண்ட "சேலம் அல் மக்ரானி கார்கோ நிறுவனம்" மோசமான வானிலை காரணமாக கப்பல் மூழ்கியதாக தெரிவித்துள்ளதோடு, ஈரானின் அஸ்ஸலுயே துறைமுக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.