செய்யது ஹமீட் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

பிறந்துரைச்சேனையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் ஓட்டமாவடி, பிறந்துரைச்சேனையைச் சேர்ந்த 60 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான முஹம்மது முஸ்தபா செய்யது ஹமீட் என்பவரே இவ்வாறு இன்று (17) வியாழக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நபர் சம்பவதினமான நேற்று (16) இரவு வீட்டின் அறையில் நித்திரைக்குச் சென்றவர் இன்று மாலையாகியும் அறையிலிருந்து வெளியே வராததையடுத்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கல்குடா பர்ஸான்)





செய்யது ஹமீட் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு செய்யது ஹமீட் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு Reviewed by Editor on March 17, 2022 Rating: 5