நாடளாவிய ரீதியில் இன்று (18) வெள்ளிக்கிழமை திட்டமிட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
A,B,C,D,E,F,G,H,J,K மற்றும் L ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி நேரம் 40 நிமிடம் மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கிடையில், P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடமும் மின்வெட்டு ஏற்பட உள்ளது.
மின்சாரத் தடையை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.