புதிய கணக்காளராக பதவியேற்ற கணக்காளர் எம்.எப்.பர்ஹான்

(றிஸ்வான் சாலிஹு)

அம்பாறை பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக, இலங்கை கணக்காளர்கள் சேவையைச் சேர்ந்த எம்.எப்.பர்ஹான் திங்கட்கிழமை (07) பிரதேச செயலகத்தில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை கணக்காளர் சேவையைச் சேர்ந்த இவர், 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரை அக்கரைப்பற்று மாநகர சபையில் கணக்காளராக பணி புரிந்து, வருடாந்த இடமாற்றலுக்கமைவாகவே அம்பாறை பிரதேச செயலகத்திற்கு தற்போது இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரியான இவர், அண்மையில் வெளியான இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை இறுதிப்பரீட்சையில் சட்டத்துறைப் பட்டத்தையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




புதிய கணக்காளராக பதவியேற்ற கணக்காளர் எம்.எப்.பர்ஹான் புதிய கணக்காளராக பதவியேற்ற கணக்காளர் எம்.எப்.பர்ஹான் Reviewed by Editor on March 08, 2022 Rating: 5