அரச மற்றும் தனியார் பாடசாலைகள் நாளை ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (07) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்காக பெப்ரவரி 7ஆம் திகதி முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

பாடசாலைகளை நடாத்தும் போது மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்களை தொகுதிகளாக அழைப்பதற்கும், வகுப்பறையில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால், அவர்களை மூன்று குழுக்களாக பிரித்து வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற தீர்மானம் அதிபர்களிடமே விடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.




அரச மற்றும் தனியார் பாடசாலைகள் நாளை ஆரம்பம் அரச மற்றும் தனியார் பாடசாலைகள் நாளை ஆரம்பம் Reviewed by Editor on March 06, 2022 Rating: 5