(க.கிஷாந்தன்)
அட்டன் நகரில் உள்ள பிரதான வழிகளை மறித்து சாரதிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் இன்று (30) புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு,அட்டன் நகரம் பகுதியளவு ஸ்தம்பிதமடைந்துள்ளது.
அட்டன் நகரிலுள்ள எரிபொருள் நிலையத்தில் டீசலை பெற்றுக்கொள்வதற்கு நேற்று (29) மாலை முதல் சாரதிகள் காத்திருந்தனர். எனினும், இறுதி நேரத்தில் டீசல் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சாரதிகள் பொதுமக்களுடன் இணைந்து அட்டன் மணிக்கூட்டு கோபுரம் சந்தியில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டு அதன்பின்னர் பொலிஸாரின் தலையீட்டுடன் போராட்டம் நிறுத்தப்பட்டது.
பிரதான வழிகளை மறித்துசாரதிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் போராட்டத்தில்
Reviewed by Editor
on
March 30, 2022
Rating: