அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள மலையடிக்கிராமத்தில் வீடு ஒன்றின் மூன்றாவது மாடியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை இரண்டு கஞ்சா செடிகளுடன் இன்று வியாழக்கிழமை (17) வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று பகல் குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் வீட்டின் மூன்றாவது மாடியின் மேல் பூச்சாடிகளுடன் பூச்சாடிகள் வளர்ப்பது போல கஞ்சா செடிகளை வளர்த்துவந்துள்ள இரண்டு கஞ்சா செடிகளை மீட்டதுடன் 33 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வீட்டின் மேல் மாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்த நபர் கைது
Reviewed by Editor
on
March 17, 2022
Rating: