இம்முறை (2021ஆம் ஆண்டு) நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை கஸ்ஸாலி வித்தியாலயத்தில் இருந்து ரீ.எப்.ஸமா என்ற மாணவி 159 புள்ளிகளை பெற்று புலமைமைப் பரிசில் பெறுவதற்கு சாதனை வெற்றியை பெற்றுள்ளார்.
சுமார் 20 வருட காலமாக எந்த ஒரு மாணவர்களும் இப்பாடசாலையில் வெட்டுப்புள்ளியை தாண்டாத நிலையில் இம்முறை இவ்வெற்றியை இம்மாணவி அடைந்துள்ளார்.
இவ்வெற்றிக்கு காரணம் இம்முறை இப்பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய கல்வி நடவடிக்கை முயற்சியே என்பதோடு, இச்சாதனையை பெற்ற மாணவி,பெற்றோர், பாடசாலை அதிபர் யூ.எல்.றபீக், வகுப்பாசிரியர் யூ.எல்.சுபைதா மற்றும் ஆசிரியர் ஏ.சீ.எம் நயீம் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
கல்லரிச்சல் கஸ்ஸாலி பாடசாலையில் வரலாற்று வெற்றி
 
        Reviewed by Editor
        on 
        
March 14, 2022
 
        Rating: