தொழில் முயற்சியாளர்களுக்கு துரித கடன் வழங்கும் செயற்திட்டம்

அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி வங்கியின் அங்கத்தர்வர்களாகவுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு  துரித கடன் வழங்கும் செயற்திட்டம் புதன்கிழமை (24) ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது. 

சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ரீ.கே. றஹ்மத்துல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் மற்றும் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம்.தஸ்லீம் ஆகியோரினால் பல்வேறுபட்ட தொழில் துறை முயாட்சியாளர்களுக்கு இத்துரித கடன் சேவை வழங்கி ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது.

சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலுக்கமைய சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சௌபாக்கியா இவ்வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸானின் வழிகாட்டல் ஆலோசனையுடன் பல்வேறுபட்ட நலனுதவி வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.









தொழில் முயற்சியாளர்களுக்கு துரித கடன் வழங்கும் செயற்திட்டம் தொழில் முயற்சியாளர்களுக்கு  துரித கடன் வழங்கும் செயற்திட்டம் Reviewed by Editor on March 25, 2022 Rating: 5