கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலைகளில் கடமை நேரத்தில் வைத்தியசாலைகளில் இல்லாத உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக கடந்த வாரம் மூவருக்கு சம்பளமற்ற கடமை நேரமாக கணிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவருக்கு இடமாற்றமும் மற்றுமொருவருக்கு பதவி குறைப்புக்கடிதமும் வழங்கப்பட்டுள்ளது என்று பணிமனையின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளரின் அதிரடி செய்தி..
Reviewed by Editor
on
March 22, 2022
Rating: