(சியாத்.எம்.இஸ்மாயில்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நலன்புரிச்சங்கத்தின் (2022 - 2023) நடப்பாண்டுக்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு வைத்தியர்.ஏ.சி. அப்துல் றசாக் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் (21) நடைபெற்றது.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர். அஸாத் எம். ஹனிபா பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், நலன்புரிச்சங்கத்தின் புதிய தலைவராக வைத்தியர் ஏ.ஜி.எம்.ஷயீ மற்றும் பிரதித் தலைவராக வைத்தியர் எஸ். அபுல் ஹூதா தெரிவு செய்யப்பட்டனர்.
இத்தெரிவில் செயலாளாராக ஏ.சி.நகீப் பொருளாளராக எஸ்.பர்னாஸ் பிரதி செயலாளர் எம்.எம்.ஏ.இஸ்ஸாத் தெரிவு செய்யப்பட்டதோடு நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாக ஏ.ஜி.எப்.ஹினாயா, எம்.ஏ.ஹமீன், எஸ்.யோகராஜா ஏ.எம்.கபீல், வீ.ஹூகேன்திகா, எஸ்.என்.ஏ.ஹிஸாம், எம்.சீ.எம்.மஸ்கூத் ஜி.சுதர்சினி, ஏ.எச்.சறூக், ஜே.எம்.இர்ஸாத், ஏ.றிபாஸ், ஏ.வி.பி.என்.குனசேகர, டபள்யு.ஜி.எல்.டுலான்ஜனி, ஜெ.ஜஸூர், பி.ரி.சிஹாப்தீன், ஏ.நௌசாட், எஸ்.ரி.மஹ்பூப், ஏ.எம்.என்.தரன்கனீ ஆகிய 18 பேர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
நலன்புரிச்சங்கத்தின் ஆலோசகர்களாக வைத்திய அத்தியட்சகர் டாக்டர். அஸாத் எம். ஹனிபா, வைத்தியர் எம்.எம்.தாஸிம், தாதிய பரிபாலகர் பி.ரீ. நௌபர், கணக்காளர் எம்.ஆர். நஸிமுல் ஹக், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எல் சாதிக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.