(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சொந்தமான பொது நூலக கட்டிடத்தின் முதலாவது மாடியில் அண்மையில் இடம் மாறி இயங்கி கொண்டிருக்கும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பிறை எப்.எம். வானொலி நிலையத்திற்கு கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் இன்று(16) புதன்கிழமை திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஏ. ரீ.எம்.றாபி, மாநகர உத்தியோகத்தர்கள், பிறை எப்.எம்.நிலையப் பொறுப்பதிகாரி எம்.பீ.எம்.பஷீல், பிறை எப்.எம்.சந்தைப்படுத்தல் முகாமையாளர், சிரேஷ்ட அறிவிப்பாளர் எஸ்.றபீக் உட்பட அறிவிப்பாளர்கள், நூலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று பொது நூலக வளாக உள்ளக மற்றும் தரிப்பிட நிர்மாண அபிவிருத்தி தொடர்பாகவும் இக்கள விஜயத்தின் போது ஆராயப்பட்டது.
அண்மைக்காலமாக மாநகர முதல்வர் அவர்கள் இம்மக்களின் தேவைகளாக இருக்கும் உள்ளூர் அபிவிருத்தி நடவடிக்கைகளை தனது கண்காணிப்பின் கீழ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை கொண்டு செயற்படுத்தி வருகின்றமை பாராட்டத்தக்கது.