கட்டுமானப் பணி ஊழியர்களுக்கு பாலியல் நோய்கள் தொடர்பான விழிப்புணர்வூட்டல்

(றிஸ்வான் சாலிஹு)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அணுசரனையுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால், அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வீதி திருத்தப்பணிகளை மேற்கொள்கின்ற கட்டுமானப் பணி ஊழியர்களுக்கு பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வூட்டல் செயலமர்வும், எச்.ஐ.வி. பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

அக்கரைப்பற்று கடற்கரை தனியார்  விடுதி ஒன்றின் கேட்போர்கூடத்தில் செவ்வாய்க்கிழமை (29)  நடைபெற்ற இந்த செயலமர்வில் வளவாளராக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின், பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் நோய்கள் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.என்.எம்.தில்ஷான் கலந்து கொண்டு இது தொடர்பில் விளக்கங்களை வழங்கினார்.

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய்கள் பிரிவு மற்றும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன இணைந்து நடாத்திய இந்த செயலமர்வும், பரிசோதனைகளும் மிகவும் பயனுள்ள நிகழ்வாகும் என்று பயனாளிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.








கட்டுமானப் பணி ஊழியர்களுக்கு பாலியல் நோய்கள் தொடர்பான விழிப்புணர்வூட்டல் கட்டுமானப் பணி ஊழியர்களுக்கு பாலியல்  நோய்கள் தொடர்பான விழிப்புணர்வூட்டல் Reviewed by Editor on March 31, 2022 Rating: 5