சமாதான ஊடக அமைப்பினால் மூவருக்கு ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஞாபகார்த்த ஊடக விருது

(எம்.எம்.ஜெஸ்மின்)

ஸ்ரீலங்கா சமாதான கற்கை நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச கல்விச்சுற்றுலா ஆய்வு மகாநாடு கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை (30) இடம்பெற்றது.

இதன்போது இலங்கை சமாதான ஊடக அமைப்பினால் இலங்கை ரூபவாஹினி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எம்.எஸ்.எம். இர்பான் , இலங்கை ரூபவாஹினி செய்தி வாசிப்பாளர் இர்ஸாத் ஏ காதர் , பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஸீர் அப்துல் கையும் ஆகியோருக்கு காலஞ்சென்ற அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் ஞாபகார்த்தமாக  இலங்கை சமாதான ஊடக அமைப்பின் தலைவர் எம்.எம்.ஜெஸ்மின் தலைமையில் ஊடக விருது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சமாதான கற்கை நிறுவனத்தின்  தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் , சமாதான கற்கை நிறுவனத்தின்  தவிசாளர் சமீர் யுனூஸ் , முன்னாள் அமைச்சர் அலிசாக்கிர் மௌலானா , திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.முஸர்ரப் ஆகியோர் கலந்து கொண்டனர்.




சமாதான ஊடக அமைப்பினால் மூவருக்கு ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஞாபகார்த்த ஊடக விருது சமாதான ஊடக அமைப்பினால் மூவருக்கு ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஞாபகார்த்த ஊடக விருது Reviewed by Editor on April 04, 2022 Rating: 5