அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் போராட்டம் இன்று (14) வியாழக்கிழமை 6ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக இரத்தினபுரி சிறிபாகம-குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்து கொண்டுள்ளார்.
நாளை நான் இந்த பதவியில் இருக்கமாட்டேன், இன்று நான் இங்கு வந்துள்ளேன். என்னைப் போல முதுகெழும்பு உள்ள நாட்டின் நெருக்கடி நிலைமையை புரிந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகள் இங்கு வரவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு கருத்து தெரிவித்த பொலிஸ் அதிகாரியை தற்போது பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.
Reviewed by Editor
on
April 14, 2022
Rating:
