சம்மாந்துறை அல்-உஸ்வா பிலாண்டேசன் வளாகத்தில் மஞ்சள் அறுவடை

(ஐ.எல்.எம் நாஸிம்)

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளேக் ஜே மேற்கு 3 கிராம சேவையாளர் பிரிவில்அமைந்துள்ள சம்மாந்துறை அல்-உஸ்வா பிலாண்டேசன் வளாகத்தில் மஞ்சள் செய்கையானதுவெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டது.

அல்-உஸ்வா  பிலாண்டேசன் உரிமையாளர்  இஸ்லாலெப்பை முஹம்மது முஸ்தபா மெளலவி தலைமையில்இந்த மஞ்சள் அறுவடை இன்று (20) இடம் பெற்றது.

அல்-உஸ்வா  பிலாண்டேசன் வாளாகத்தில் மொத்தமாக எட்டு பாத்திகளில் பயிர்செய்கை செய்யப்பட்டிருந்தது. அதில்  4000 கிலோ மஞ்சள் அறுவடையின் போது கிடைக்கப்பெற்றது.

இந்த அறுவடை நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனிபா தலைமையிலான குழுவினர் ,சம்மாந்துறை விவசாய விரிவாக்கல்  நிலைய பொறுப்பதிகாரி எம்.ரீ. எம் . நளீர்,சம்மாந்துறைபொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன்  என பலர் கலந்து கொண்டனர்.



சம்மாந்துறை அல்-உஸ்வா பிலாண்டேசன் வளாகத்தில் மஞ்சள் அறுவடை சம்மாந்துறை அல்-உஸ்வா  பிலாண்டேசன் வளாகத்தில் மஞ்சள் அறுவடை Reviewed by Editor on April 20, 2022 Rating: 5