பல சவால்களுக்கு மத்தியில் இன்று கூடும் நாடாளுமன்றம்

பாராளுமன்ற அமர்வு இன்று (05) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 10.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

மற்றும் விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இன்றைய தினம் பொது அலுவல்களை அடுத்து நீதிமன்ற அவமதிப்புச் சட்ட தனியார் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டை அடுத்து சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.

அதனை அடுத்து, பி.ப. 4.30 மணி முதல் பி.ப. 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப. 4.50 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.




பல சவால்களுக்கு மத்தியில் இன்று கூடும் நாடாளுமன்றம் பல சவால்களுக்கு மத்தியில் இன்று கூடும் நாடாளுமன்றம் Reviewed by Editor on April 05, 2022 Rating: 5