ஜனாதிபதி கௌரவமாக பதவி விலக வேண்டும் - சந்திரிக்கா வலியுறுத்து

மக்களின் கோரிக்கையை ஏற்று,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும் என்று  இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமிக்க பெண் ஜனாதிபதியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, ராஜபக்ச குடும்பமும் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் என்றும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய  நேர்காணலொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

" நான் குடும்ப அரசியலுக்கு எதிரானவள், குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் இல்லாத சூழ்நிலையில்தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன். எனது அம்மாவும் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என்ற உறுதிமொழியை எனக்கு வழங்கியிருந்தார். குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு என்பதால்தான் மகனைகூட அரசியலில் களம் இறக்கவில்லை என்றும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி கௌரவமாக பதவி விலக வேண்டும் - சந்திரிக்கா வலியுறுத்து ஜனாதிபதி கௌரவமாக பதவி விலக  வேண்டும் - சந்திரிக்கா வலியுறுத்து Reviewed by Editor on April 22, 2022 Rating: 5