சந்திரகாந்தன் எம்.பி தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உயர்மட்டக் குழுவினால் இன்று (21) சனிக்கிழமை  விசேட கலந்துரையாடல் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் போன்றவற்றின் மத்தியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மக்கள் நலன்சார் பணிகள் மற்றும் அரசியல் பணிகள், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், அடுத்த கட்ட நகர்வுகள் போன்றவை தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உயர்மட்டக்குழு விஷேட கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்திருந்தது.




சந்திரகாந்தன் எம்.பி தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் சந்திரகாந்தன் எம்.பி தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் Reviewed by Editor on May 21, 2022 Rating: 5