இன்று (20) முதல் வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளுக்கு மட்டுமே பெற்ரோல் நேரடியாக விநியோகிக்கப்படும் என லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (எல்ஐஓசி) தெரிவித்துள்ளது.
இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேன்கள், கொள்கலன்கள் அல்லது போத்தல்களில் பெற்ரோல் விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என்று LIOC தெரிவித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானங்கள் அமுல்படுத்தப்படும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் LIOC மேலும் தெரிவித்துள்ளது.
LIOC வெளியிட்டுள்ள அறிவித்தல்
Reviewed by Editor
on
May 20, 2022
Rating: