(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று, பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த முஹம்மட் தம்பி ஜஃபர் இஸ்ஹாக் முழுத்தீவுக்குமான சமாதான நீதவானாக வெள்ளிக்கிழமை (02) அம்பாறை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கெளரவ லுசாகா குமாரி தர்மகீர்த்தி அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தில் உத்தியோகத்தராக கடமையாற்றும் இவர், பட்டியடிப்பிட்டி அர்-றஹீமிய்யா மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராகவும் மற்றும் சமூக சேவை அமைப்புக்களின் ஆலோசகராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜஃபர் இஸ்ஹாக் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்தார்
Reviewed by Editor
on
September 03, 2022
Rating:
Reviewed by Editor
on
September 03, 2022
Rating:
