ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தக்வா ஜும்மா பள்ளிவாசலினால் வாழ்வாதார உதவிகள் வழங்கல்

(றிஸ்வான் சாலிஹு)

பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முகமாக வருமானம் குறைந்த மக்களுக்காக அரிய இன கருங்கோழிக்குஞ்சுகளை அக்கரைப்பற்று தக்வா ஜும்மா பள்ளிவாசல் நிருவாக சபையினரால் இலவசமாக வழங்கும் திட்டம் திங்கட்கிழமை (03) ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.பபாகரன் அவர்களின் வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளர் ஆர்.சுபாஹர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமைப்பீடமுகாமையாளர் என்.கிருபாகரன், கருத்திட்ட முகாமையாளர் கே.சத்தியப்பிரியன், வங்கிச்சங்க முகாமையாளர் சிவபிரிய சுதாகரன், அக்கரைப்பற்று தக்வா ஜும்மா பள்ளிவாசல் உபசெயலாளர் கே.எல்.எம்.சாதிக், சமுர்த்தி திட்ட முகாமையாளரும், பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினருமான என்.ரீ.மசூர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இப்பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசங்களை சேர்ந்த வறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தக்வா ஜும்மா பள்ளிவாசலினால் வாழ்வாதார உதவிகள் வழங்கல் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தக்வா ஜும்மா பள்ளிவாசலினால் வாழ்வாதார உதவிகள் வழங்கல் Reviewed by Editor on October 05, 2022 Rating: 5