5 லீற்றரில் இருந்து 10 லீற்றராக பெற்றோல் அதிகரிப்பு

இன்று (06) ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் அமுலாகும் வகையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கு அமைவாக முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு 5 லீற்றரில் இருந்து 10 லீற்றராக அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

மாகாண போக்குவரத்து அதிகாரசபை மற்றும் பொலிஸ் திணைக்களத்தில் ஒன்லைனில் பதிவுசெய்யப்பட்ட மேல் மாகாண முழு நேர முச்சக்கர வண்டிகளுக்கு ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



5 லீற்றரில் இருந்து 10 லீற்றராக பெற்றோல் அதிகரிப்பு 5 லீற்றரில் இருந்து 10 லீற்றராக பெற்றோல் அதிகரிப்பு Reviewed by Editor on November 06, 2022 Rating: 5