வெளியான க.பொ.த சா/தர பரீட்சை முடிவுகளின் படி கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலாமிடத்தை பெற்றுள்ளதாக மாகாண கல்வி பணிப்பாளர் ந.புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் வலய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலாமிடத்தினை பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மொத்தமாக பரீட்சைக்கு தோற்றிய 2056 மாணவர்களில் 1789 பேர் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதுடன் இதனுள் 128 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலிடம்
Reviewed by Editor
on
November 28, 2022
Rating: