கொடூரமான முறையில் நபரொருவர் வெட்டிக் கொலை

மட்டக்குளிய பிரதேசத்தில் நபர் ஒருவர் இன்று (28) திங்கட்கிழமை கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்குளிய பிரதேத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை காரில் வந்த இருவரே இந்நபரை தாக்கியதாகவும் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இந்நபர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.



கொடூரமான முறையில் நபரொருவர் வெட்டிக் கொலை கொடூரமான முறையில் நபரொருவர் வெட்டிக் கொலை Reviewed by Editor on November 28, 2022 Rating: 5