ஆரம்ப நெறி ஆசிரிய பயிலுனர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி நிகழ்வு

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆரம்ப நெறி ஆசிரிய பயிலுனர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஆரம்ப பிரிவு விரிவுரையாளர்களின் தலைமையில் இன்று (01) வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் கண்காட்சி நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே. புண்ணியமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்துடன் கல்வி பிரிவுக்கான உப பீடாதிபதி ஏ, பாறூக் , நிதி மற்றும் நிருவாகத்துக்கான உப பீடாதிபதி எம்.சி. ஜூனையிட், தொடருறு கல்விக்கான உப பீடாதிபதி எம்.ஐ. ஜஃபர் மற்றும் பதிவாளர் ஏ. புஷ்பராஜா , இணைப்பாளர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.








ஆரம்ப நெறி ஆசிரிய பயிலுனர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி நிகழ்வு ஆரம்ப நெறி ஆசிரிய பயிலுனர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி நிகழ்வு Reviewed by Editor on December 01, 2022 Rating: 5