பொது வெளிகளில் இறந்த பிராணிகளை அகற்ற பிரதேச சபையை அழையுங்கள் - பிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு

(றிஸ்வான் சாலிஹு)

பல்வேறு சடங்குகளுக்காக வீட்டில் அறுக்கப்படும் மாடு, ஆடு போன்ற பிராணிகளின் கழிவுகள் மற்றும் இறந்த பிராணிகளை முறையாக அகற்றாமை தொடர்பில் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு பல்வேறு முறைப்பாடுகள் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் மேற்கொண்ட களப் பரிசோதனைகளின் போது இறந்து அழுகிய நிலையில் உள்ள கால்நடைகள் மற்றும் அதன் பாகங்களை பொது இடங்களில் பொதுமக்கள் வீசுகின்ற உண்மை நிலைகளை அறிந்து கொண்டுள்ளோம் என அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் கருத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து இசங்கணிச்சீமை பிரதேசம் வரை நோக்கி செல்லுகின்ற வீதியின் இடையில் அமைந்திருக்கும் அக்கரைப்பற்று பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஒருவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான காணியில் அறுக்கப்பட்ட மாடுகளின் கழிவுகளை தற்காலத்தில் அடிக்கடி  இனந்தெரியாதோர் வீசிவிட்டு செல்வதனால் ஏற்படுகின்ற அசௌகரியம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது அறுக்கப்பட்ட மாடுகளின் கழிவுகள் மட்டுமல்லாது இறந்து உருக்குலையும் நிலையில் பெரியதொரு பசு மாட்டினையும் அங்கு அடையாளம் கண்டோம்.

புழுத்து வெடிக்கின்ற நிலையில் இருந்த அந்த இறந்த பிராணியின் துர்நாற்றத்தினால் பசுமை பொருந்திய அந்த வயல் பிராந்தியமே பெரும் அசௌகரிய நிலைமைக்கு இருந்ததை பார்க்கின்ற போது எமது மக்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் மற்றவர்கள் எல்லோரும் பாதிக்கப்படுவதுடன், பசுமையான அழகான சூழலும் மாசுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்ததோடு, இந்த அவதானிப்பின் பின்னர் பிரதேச சபை ஆளணியை கொண்டு பிரதேச சபை வாகனங்களின் உதவியுடன் அக்கழிவுகள் அகற்றப்பட்டது.

மீண்டும் இவ்வாறான நாசகார நடவடிக்கைகள் தொடரக்கூடாது என்பதோடு, ஆடு, மாடுகளை அனுமதி பெறப்பட்ட பொது தேவைகளுக்காக அறுக்கப்பட்டால் அல்லது ஏதாவது பிராணிகள் உங்களுடைய வீட்டில் அல்லது பொது வெளியில் இறந்தால் உடனடியாக அக்கரைப்பற்று பிரதேச சபையோடு தொடர்பு  கொண்டு அப்பிராணிகள் அழுகிப்போவதற்கு முன்னர் அதனை சரியான முறையில் சுகாதார வழிமுறைகளை பேணி பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் புதைத்து விடுவதற்கு பிரதேச சபைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களை பிரதேச சபை தவிசாளர் இதன் போது கேட்டுக்கொண்டுள்ளார்.



பொது வெளிகளில் இறந்த பிராணிகளை அகற்ற பிரதேச சபையை அழையுங்கள் - பிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு பொது வெளிகளில் இறந்த பிராணிகளை அகற்ற பிரதேச சபையை அழையுங்கள் - பிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு Reviewed by Editor on December 02, 2022 Rating: 5