பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லுரியிலிருந்து சட்டத்துறைக்கு செல்லும் முதல் மாணவி நிப்லா

(ஏ.எச்.எம் சிஹார்)

98 வருட கால கல்லூரியின் கல்விப்பணியில் சட்டத்துறை செல்லும் முதல் மாணவியாக றியால் மற்றும் ஆசிரியை துல்பிகா ஆகியோர்களின் புதல்வியான எம்.ஆர்.நிப்லா பாடசாலையின் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

இம்மாணவி மொ/பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லுரியில் தரம் 1-13 வரை கல்வி  கற்று,  கடந்த க.பொ.த(உ/த) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவியார். அப்பெறுபேற்றின் அடிப்படையில் கொழும்பு பல்கலைகழக சட்டத்துறை பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

மொ/பகினிகஹவெல மத்திய கல்லுரி மாணவன் எம்.நௌவாப்தீன் வயம்ப பல்கைல கழகத்தின் பௌதீக விஞ்ஞான பீடத்திற்கும்,எம்.ஆர்.ரிம்சாத்  கிழக்கு பல்கலைகழகத்தின் கணினி விஞ்ஞானத்துறைக்கும், எம்.ஆர். ஸாதிகா சித்த வைத்திய துறைக்கும், எம்.எஸ்.சஹ்லா தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞான பிரிவிற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு எம்.ஏ.அஸ்மா பேராதனை பல்கலைகழக முகாமைத்துவ பீடத்திற்கும், எம்.எப் பஹ்மிலா கொழும்பு பல்கலைகழகத்தின் கலை பீடத்திற்கும்,  எம்.என்.அஸ்பா பேராதனை பல்கலைகழகத்தின் கலைப்பிடத்திற்கும், எம்.ஏ.பஸ்லா கிழக்கு பல்கலைகழகத்தின் கலைப் பீடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இச்சிறந்த பெறுபேற்றை பெற்று பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகம் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லுரியிலிருந்து சட்டத்துறைக்கு செல்லும் முதல் மாணவி நிப்லா பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லுரியிலிருந்து  சட்டத்துறைக்கு செல்லும் முதல் மாணவி நிப்லா Reviewed by Editor on December 02, 2022 Rating: 5